தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அண்ணா சாலையில் அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சிறந்த சிந்தனையாளராக, சமூகப்புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்ட தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியாரின் 140–வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.